Home
» உங்களுக்கு தெரியுமா!
» எலும்புக்கூடாய் சடலம்...பெற்ற மகனை இப்படியா கொல்வது: பதறவைத்த சம்பவம்....
எலும்புக்கூடாய் சடலம்...பெற்ற மகனை இப்படியா கொல்வது: பதறவைத்த சம்பவம்....
அமெரிக்காவில் 11 வயது சிறுவனை அவரது தாயார் 3 ஆண்டுகள் அலமாரிக்குள் பூட்டி வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இக்கொடிய சம்பவம் நடந்துள்ளது. யோனாதன் டேனியல் என்ற 11 வயது சிறுவன் கடந்த 3 ஆண்டுகளாக அவரது தாயாரால் அலமாரிக்குள் அடைத்து வைத்து சித்திரவதைக்கு உள்ளாகி தற்போது மரணமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்தே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள இவர்களது வீட்டில் இருந்து திடீரென்று ஒரு நாள் யோனாதன் டேனியல் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இது குறித்த விசாரித்த அக்கம்பக்கத்தினரிடம் அவரது தாயார் வெரோனிக்கா மழுப்பல் பதில்களை சாமர்த்தியமாக கூறி வந்துள்ளார். சிறப்பு கல்வி கற்கும் பொருட்டு யோனதான் மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளதாகவும், ஆண்டுக்கு ஒரு முறை வந்து செல்ல மட்டுமே முடியும் எனவும் அவர் நம்ப வைத்துள்ளார்.
யோனாதனின் வளர்ப்பு தந்தைக்கு கூட தமது மகனின் இருப்பிடம் குறித்து தகவல் சொல்லப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வெரோனிக்கா தமது கணவரிடம் வந்து, யோனாதன் இறந்துள்ளதாகவும் எஞ்சியுள்ள 3 குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
யோனாதன் மெக்சிக்கோவில் படித்து வருவதால் அங்கு சென்று உடலை பெற்று வரவேண்டும் என்று கருதிய அவருக்கு வெரோனிக்கா கூறிய தகவல்களும் காண்பித்த காட்சிகளும் தாங்கிக்கொள்ளும் அளவைவிட அதிகமான வலியை தந்துள்ளது.
அவர் தங்களது படுக்கை அறைக்கு அருகாமையில் இருக்கும் அலமாரியை திறந்து பார்த்தபோது உயிரற்ற, எல்லும் தோலுமாக மக்கிய உருவம் ஒன்று அதன் உள்ளே கிடந்துள்ளது.
அலமாரிக்குள் கண்ட காட்சிகள் அவரை நிலைகுலையச் செய்தது. உடனடியாக அங்கிருந்து விரைந்து வெளியேறிய அந்த நபர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
வெரோனிக்காவின் எஞ்சிய 3 மக்களுக்கும் தங்களது சகோதரன எங்கே அடைபட்டு கிடக்கிறான் என்பது கடந்த 3 ஆண்டுகளாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் உடல் நலம் குன்றியதால் தாயார் அவருக்கு சிறப்பு கவனம் தருவதாக எண்ணி இருந்திருக்கிறார்கள்.
மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக எவரிடமும் வெளியே தெரிவிக்க வேண்டாம் என்ற தாயாரின் கட்டளைக்கு பயந்து அவர்கள் 3 பேரும் சொல்லவும் இல்லை.
சமீபத்தில் இவர்கள் வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தபோது கூட யோனாதனை அட்டைப்பெட்டிக்குள் மறைத்து வைத்து கொண்டு சென்றுள்ளதாக வெரோனிக்காவின் 18 வயதாகும் மூத்த மகன் தெரிவித்துள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment