Home » Posts filed under தமிழ்
Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts
உலகம் வியந்த பண்டைய தமிழனின் அறிவாற்றல் !
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விசயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள்.
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று.
வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு
வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்!
யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள்: இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களை போலவே யானைகளுக்கும் இளமை கால பெயர்கள் உண்டு..
(1) கயந்தலை - பிறந்த உடனான யானையின் பெயர்
(2) போதகம் - எழுந்து நிற்க தொடங்கும் பருவம்
(3) துடியடி - ஓடி ஆடி விளையாடும் பருவம்
(4) களபம் - உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும் பருவம்
(5) கயமுனி - மற்ற இளம் யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம்
பொதுவான பெண் யானையின் பெயர்கள்:
பிடி, அதவை, வடவை, கரிணி, அத்தினி
நிறங்களை கொண்டு யானையின் பெயர்கள்:
(1) கரிய நிறம்: யானை/ஏனை
(2) வெள்ளை நிறம்: வேழம்
யானையின் மற்ற காரண பெயர்கள்:
(1) உம்பல் - உயர்ந்தது
(2) கறையடி - உரல் போன்ற பாதத்தை உடையது
(3) பெருமா - பெரிய விலங்கு
(4) வாரணம் - சங்கு போன்ற தலையை உடையது
(5) புழைக்கை / பூட்கை / தும்பி - துளையுள்ள கையை உடையது
(6) ஓங்கல் - மலை போன்றது
(7) பொங்கடி - பெரிய பாதத்தை உடையது
(8) நால்வாய் - தொங்குகின்ற வாயை உடையது
(9) குஞ்சரம் / உவா - திரண்டது
(10) கள்வன் - கரியது
(11) புகர்முகம் - முகத்தில் புள்ளியுள்ளது
(12) கைம்மலை - மலையை போன்ற கையை உடையது
(13) வழுவை - உருண்டு திரண்டது
(14) யூதநாதன் - யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்
(15) மதோற்கடம் - மதகயத்தின் பெயர்
(16) கடகம் - யானைத்திரளின் / கூட்டத்தின் பெயர்
யானையின் ஏனைய பெயர்கள்:
(1) களிறு
(2) மாதங்கம்
(3) கைம்மா
(4) உம்பர்
(5) அஞ்சனாவதி
(6) அரசுவா
(7) அல்லியன்
(8) அறுபடை
(9) ஆம்பல்
(10) ஆனை
(11) இபம்
(12) இரதி
(13) குஞ்சரம்
(14) இருள்
(15) தும்பு
(16) வல்விலங்கு
(17) தூங்கல்
(18) தோல்
(19) எறும்பி
(20) ஒருத்தல்
(21) நாக
(22) கும்பி
(23) கரேணு
(24) கொம்பன்
(25) கயம்
(26) சிந்துரம்
(27) வயமா
(28) தந்தி
(29) மதாவளம்
(30) தந்தாவளம்
(31) மந்தமா
(32) மருண்மா
(33) மதகயம்
(34) போதகம்
இன்று 131-வது பிறந்தநாளை காணும் மகாகவி பாரதி....
மகாகவி பாரதி, இவரை நாமும் நமது இந்தியாவும் அவ்வளவு சீ்க்கிரத்தில் மறந்துவிட முடியாது. டிசம்பர் 11ம் திகதி (1882ம் ஆண்டு பிறந்த), இவரது 131வது பிறந்தநாளை நாடு கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவரை பற்றிய சில விடயங்களை நாம் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்
இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர் மட்டுமின்றி மிகச்சிறந்த பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களை தன்னகத்தே கொண்டவர் ஆவார்.</div>
கவிதை எழுதுபவன் கவிஞனாகிறான். ஆனால் அதற்கும் மேலாக கவிதையையே தனது வாழ்க்கையாகவும் முழு மூச்சாகவும் கொண்டு வாழ்ந்தவர் பாரதியார் என்றால் அது மிகையாகாது.
இவரது கவித்திறனை கண்டு வியந்த மதுரை எட்டப்ப நாயக்க மன்னர் எட்டயபுர அரசசபையின் முன்நிலையில் “சுப்புரமணியாக” இருந்த நமது கவிஞருக்கு பாரதி என பட்டமளித்து மகிழ்ந்தார். அன்று முதல் சுப்புரமணியாக இருந்தவர் பாரதி என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார்.
தமிழ் மீதும் தாய்நாட்டின் மீதும் அளவு கடந்த அன்பு கொண்ட பாரதி தாய்நாட்டிற்காகவும், தமிழிற்காகவும் தனது வாழ்க்கையை அற்பணித்துள்ளார். பல மொழிகளை கற்று அறிந்த இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என பெருமையுடன் மார்தட்டி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பாரதியின் படைப்புகள்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
பாஞ்சாலி சபதம்
புதிய ஆத்திச்சூடி
சுயசரிதை
பாரதி அறுபத்தாறு
ஞானப் பாடல்கள்
தோத்திரப் பாடல்கள்
விடுதலைப் பாடல்கள்
சந்திரிகையின் கதை
விடுதலைப்போராட்டத்தில் பாரதியி்ன் பங்கு
இவர் தான் கற்று அறிந்த தமிழ் மொழியையும் கவிதை திறனையும் பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.
"வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குவதும் என்போம்"
என்ற இவரது வரிகள் அநேக இளைஞர்களை விடுதலைப்போராட்டத்திற்கு தூண்டியது. இவரது வரிகளால் ஈர்க்கப்பட்ட அநேகர் சுதந்திர போராட்டத்திற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தனர் என்றால் மிகையாகாது.
“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” - என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே நம்பிக்கையுடன் பாடிய இவரது வரிகள் அக்காலக்கட்டத்தில் மக்களிடையே புத்துணுர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் துரதிஸ்ட வசமாக விடுதலைக்கு முன்பே செப்டம்பர் 11, 1921 ம் ஆண்டு மறைந்தார்.
மகாகவி பாரதி வாழ்ந்த வீடு
பாரதியின் குடும்ப உறுப்பினர்கள்
தமிழுக்கு அமுதென்று பெயர் அது எங்கள் உயிருக்கு நேர் - தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக...
ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது.தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம்.
இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று ஆங்கில மொழி உலக மொழியாக உருவெடுத்துள்ளதால் சமுதாயத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள ஆங்கிலம் தேவை என்றாலும் அவசியம் ஒரு போதும் அடையாளம் ஆகிவிடாது என்பதை உணர வேண்டும். தமிழை முழுமையாக தெரிஉந்து கொண்டு பின்னர் ஆங்கிலத்தை படியுங்கள்.
ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை? காரணம், தமிழ் மீதான ஒரு அறுவருப்பு தமிழனுக்குள்ளேயே விதைக்கப்பட்டிருக்கிறது. தமிழுக்காக போராட வேண்டாம் வீட்டில் தமிழில் பேசுங்கள் போதும். அது தான் தமிழை வளர்க்கும். ஆரியம், இங்கிலாந்து என எத்தனையோ படையெடுப்பைத் தாண்டி வாழ்ந்த தமிழ் இன்று தமிழனாலே மாண்டு விடுமோ? உலகிலேயே ஆங்கிலத்தை மிகச் சரியாக உச்சரிப்பவர்களும் தமிழர் தான், தன் தாய் மொழி குறித்த அடிப்படை அறிவு பெறாதவர்களும் தமிழர் தான். இது பெருமை படக் கூடிய விடயமா? தமிழின் சிறப்புகளை இங்கே உணர்த்துவதே எமது நோக்கம். தமிழின் சில சிறப்புகளை இங்கே காணலாம்.
தமிழ் மொழிக்கு என்று இயற்கையாகவே சில சிறப்புகள் உண்டு. தமிழ் மொழி மற்ற எல்லா மொழிகளையும் விட மிக எளிமையானது. ஒரு மிகச் சிறந்த இலக்கணத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மொழி தமிழ் மொழி. இன்றைக்கு ஆங்கிலத்தை பெருமையாக நினைப்பவர்கள் இதைக் கண்டிப்பாக உணர வேண்டும். வெறும் 26 எழுத்துக்களைக் கொண்ட மொழி, ஒரு செம்மையான இலக்கணம் இல்லாத மொழி, ஒரு ஒழுங்கில்லாத மொழி ஆங்கிலம். ஆனால் தமிழ் அப்படி இல்லை. வாழ்வியல், அறிவியல் என அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கி செதுக்கப்பட்டது தமிழ் மொழி. அதற்கு ஒரு சில சான்றுகளை இங்கே காணலாம்.
ஆங்கிலத்தில் ‘BOOK’ என்பதை எவ்வாறு எழுதுகிறீர்கள் B – பி, o – ஒ, o – ஒ, k – கே. அதாவாது பிஓஓகே என்ற எழுத்துக் கூட்டு புக் என உச்சரிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆங்கில எழுத்துகளுக்கு நிலையான ஓசை இல்லை என்பதை நாம் உணரலாம். ஆனால் தமிழில் இதையே புக் என எழுத முடியும்.
அடுத்ததாக ‘ARAVAIND’ என்ற சொல்லை அரவிந்த் என்று உச்சரிக்கிறோம் ஆனால் ‘ANGEL’ என்ற சொல்லை ஏஞ்சல் என்று உச்சரிக்கிறோம். இங்கே ‘A’ என்ற ஒரே சொல்லே இடத்திற்கேற்ப ‘அ’ என்றும் ‘ஏ’ என்றும் வெவ்வேறு ஓசையைக் கொள்கின்றன.
ஆங்கிலத்துல் குறில், நெடில் என்ற பாகுபாடே இல்லை. ‘BEE’ என்ற சொல்லில் இரு குறில்கள் சேர்ந்து நெடிலாகிறது, அதே சமையம் ‘LARGE’ என்ற சொல்லில் குறிலே இங்கு நெடிலாக மாறுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள ‘BOOK’ என்ற சொல்லில் இரு குறில்கள் வந்தாலும் அது குறிலாகவே நிலைப்பெறுகிறது.
வெறும் 26 எழுத்துக்களே பெற்று எழுத்து பற்றாக்குறை கொண்ட மொழி ஆங்கிலம். அதனால் தான் ஒரே எழுத்துக்கு பல உச்சரிப்புகள், ஓசைகள் பெறுகின்றன. ஆங்கில மொழியின் உயிர் எழுத்துக்கள் வெறும் 5 எழுத்துக்களே ‘A, E, I, O, U’ மீதம் உள்ள 21 எழுத்துக்களை உயிர் மெய் எழுத்துக்கள் எனக் கொள்ளலாம். ஆனால் இவை மட்டும் ஒரு மொழியின் தேவையை பூர்த்தி செய்து விட முடியாது. ஆங்கிலத்தில் மெய் எழுத்துக்களே கிடையாது, ஆனாலும் ஒரு சில நேரங்களில் ‘Consonents’ என்று சொல்லப்படும் ஆங்கில உயிர் மெய் எழுத்துக்கள் மெய் எழுத்துக்களாக தோன்றும். உதாரணமாக “PARK” என்ற சொல்லை பார்க் என்று உச்சரிக்கும் போது ‘R’ மற்றும் ‘K’ என்ற எழுத்துக்கள் மெய் எழுத்துகளாகத் தோன்றுகின்றன.
ஆக தோழர்களே இவ்வளவு குழப்பங்களும், குறைபாடுகளும் உள்ள ஆங்கில மொழி உங்களுக்கு சிறப்பானதா?, எளிதானதா?. உங்கள் வசதிக்காக ஆதித் தமிழன் பார்த்து பார்த்து செதுக்கிய தமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும். சிந்தியுங்கள். மீண்டும் கேட்டுக்கொள்கிறோம், அவசியத்திற்கு ஆங்கிலம், அடையாளமாய்த் தமிழ்!
யாமறிந்த யாழ் மொழியில் கலக்கும் “வெள்ளை முகிலே”
இனம்,மொழி கடந்து பாரெங்கும் பட்டையை கிளப்பிய "வை திஸ் கொலைவெறி" பாடலைக் கேட்கும் எவருக்கும், ஆங்கில சொற்களின் நடுவே ஒரு சில தமிழ் வார்த்தைகளை ஒளித்து வைப்பது தான் இக்காலத்தில் வெற்றிப் பாடலின் தாரகமந்திரமாகும் என தோன்றினால் அது தவறில்லை. ஏனெனில் அதை பின்பற்றி வந்த பாடல்களும் ஹிட் ஆகிவிட்டன.
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளிவந்த எமது புலம்பெயர் இளையோரின் "வெள்ளை முகிலே"பாடலின் வெற்றியாக வியாபித்திருப்பது என்னவோ, அவர்கள் தம் தாய்மொழி மீது கொண்ட பாசம் தான்.
அதிலும் ஒருபடி மேலே சென்று "தேக்கு மரம்", "பாக்குநீர்" என் மண்ணின் மகிழ்வுகளை மழையாக தூறி மனம் தொடுகிறது "வெள்ளை முகிலே". மாசில்லா மண்ணின் மொழியிலே தரமான பாடல் தந்த GJ Arts இளைஞர்கள் பாராட்டப்பட நிச்சயமாக வேண்டியவர்களே.
மெல்லிசை தந்த கஜிநாத், அதில் சொல்லோவியம் வரைந்த பரந்தாமன், குயிலொலி எழுப்பிய சுஜீகா, மயிலாட்டமாடிய ப்ரியா, திறம்பட இயக்கிய நிஜந்தன், சிறப்பான ஒளிப்பதிவை மேற்கொண்ட திலீப் உள்ளிட்ட ஒட்டுமொத்த GJ Arts கலைக்கூடத்திற்கும், கலர் எடிட்டிங் மேற்கொண்ட சுவிஸ் RIA Media-விற்கும் எமது வாழ்த்துக்கள்.
மகாகவி பாரதியின் 92ம் ஆண்டு நினைவு நாள்
மகாகவி பாரதி, இவரை நாமும் நமது இந்தியாவும் அவ்வளவு சீ்க்கிரத்தில் மறந்துவிட முடியாது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என இவரது படைப்புகள் எண்ணிலடங்கா. தனது தாய்மொழி மீது கொண்டுள்ள பற்றினையும் காதலையும் மிக அழகாக தனது படைப்பின் மூலம் வெளிப்படுத்தியவர் பாரதியார்.
டிசம்பர் 11ம் திகதி1882ம் ஆண்டு பிறந்த இவர் செப்டம்பர் 11, 1921 ம் ஆண்டு காலமானார். இன்றுடன் இவர் நம்மை விட்டு நீங்கி 92 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த வேளையில் அவரை பற்றி சில விடயங்களை நாம் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.
இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர் மட்டுமின்றி மிகச்சிறந்த பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களை தன்னகத்தே கொண்டவர்.
கவிதை எழுதுபவன் கவிஞனாகிறான். ஆனால் அதற்கும் மேலாக கவிதையையே தனது வாழ்க்கையாகவும் முழு மூச்சாகவும் கொண்டு வாழ்ந்தவர் தான் மகாகவி பாரதியார் என்றால் மிகையாகாது.
இவரது கவித்திறனை கண்டு வியந்த மதுரை எட்டப்ப நாயக்க மன்னர் எட்டயபுர அரசசபையின் முன்நிலையில் “சுப்புரமணியாக” இருந்த நமது கவிஞருக்கு பாரதி என பட்டமளித்து மகிழ்ந்தார். அன்று முதல் சுப்புரமணியாக இருந்தவர் பாரதி என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார்.
தமிழ் மீதும் தாய்நாட்டின் மீதும் அளவு கடந்த அன்பு கொண்ட பாரதி தாய்நாட்டிற்காகவும், தமிழிற்காகவும் தனது வாழ்க்கையை அற்பணித்துள்ளார். பல மொழிகளை கற்று அறிந்த இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என பெருமையுடன் மார்தட்டி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பாரதியின் படைப்புகள்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
பாஞ்சாலி சபதம்
புதிய ஆத்திச்சூடி
சுயசரிதை
பாரதி அறுபத்தாறு
ஞானப் பாடல்கள்
தோத்திரப் பாடல்கள்
விடுதலைப் பாடல்கள்
சந்திரிகையின் கதை
விடுதலைப்போராட்டத்தில் பாரதியி்ன் பங்கு
கற்று அறிந்த தமிழ் மொழியையும் கவிதை திறனையும் பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.
"வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"
என்ற இவரது வரிகள் அநேக இளைஞர்களை விடுதலைப்போராட்டத்திற்கு தூண்டியது. இவரது வரிகளால் ஈர்க்கப்பட்ட அநேகர் சுதந்திர போராட்டத்திற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தனர் என்றால் மிகையாகாது.
“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” - என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே நம்பிக்கையுடன் பாடிய இவரது வரிகள் அக்காலக்கட்டத்தில் மக்களிடையே புத்திணுர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் துரதிஸ்ட வசமாக விடுதலைக்கு முன்பே செப்டம்பர் 11, 1921 ம் ஆண்டு மறைந்தார்.
சேனைப் படைகளால்
இயலாமல் போன தினம் ...
யானை ஒன்று மிதித்து
கவிஞனை கொன்ற தினம் ...
பதிமூன்று பேர் மட்டும்
இடுகாடு வரை வந்த தினம்,
செத்த பின் உன் பெருமையை
தூக்கிப் பிடித்தது எம் இனம்....
பாட்டால் 'பா'ரதம் ஒட்டிய
பாட்டா.....
நாடு விட்டு ஓடிய
வெள்ளையனை நீ
காணாமல் போனது
உன் துரதிர்ஷ்டமே.....
வெள்ளையன்
வெளியேறினாலும்
கொள்ளையடிக்க
உள்ளூரில் நம் இனத்தில்
மிச்சம் வைத்துப்
போனது எம்
துரதிர்ஷ்டமே...
டிசம்பர் 11ம் திகதி1882ம் ஆண்டு பிறந்த இவர் செப்டம்பர் 11, 1921 ம் ஆண்டு காலமானார். இன்றுடன் இவர் நம்மை விட்டு நீங்கி 92 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த வேளையில் அவரை பற்றி சில விடயங்களை நாம் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.
இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர் மட்டுமின்றி மிகச்சிறந்த பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களை தன்னகத்தே கொண்டவர்.
கவிதை எழுதுபவன் கவிஞனாகிறான். ஆனால் அதற்கும் மேலாக கவிதையையே தனது வாழ்க்கையாகவும் முழு மூச்சாகவும் கொண்டு வாழ்ந்தவர் தான் மகாகவி பாரதியார் என்றால் மிகையாகாது.
இவரது கவித்திறனை கண்டு வியந்த மதுரை எட்டப்ப நாயக்க மன்னர் எட்டயபுர அரசசபையின் முன்நிலையில் “சுப்புரமணியாக” இருந்த நமது கவிஞருக்கு பாரதி என பட்டமளித்து மகிழ்ந்தார். அன்று முதல் சுப்புரமணியாக இருந்தவர் பாரதி என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார்.
தமிழ் மீதும் தாய்நாட்டின் மீதும் அளவு கடந்த அன்பு கொண்ட பாரதி தாய்நாட்டிற்காகவும், தமிழிற்காகவும் தனது வாழ்க்கையை அற்பணித்துள்ளார். பல மொழிகளை கற்று அறிந்த இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என பெருமையுடன் மார்தட்டி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பாரதியின் படைப்புகள்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
பாஞ்சாலி சபதம்
புதிய ஆத்திச்சூடி
சுயசரிதை
பாரதி அறுபத்தாறு
ஞானப் பாடல்கள்
தோத்திரப் பாடல்கள்
விடுதலைப் பாடல்கள்
சந்திரிகையின் கதை
விடுதலைப்போராட்டத்தில் பாரதியி்ன் பங்கு
கற்று அறிந்த தமிழ் மொழியையும் கவிதை திறனையும் பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.
"வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"
என்ற இவரது வரிகள் அநேக இளைஞர்களை விடுதலைப்போராட்டத்திற்கு தூண்டியது. இவரது வரிகளால் ஈர்க்கப்பட்ட அநேகர் சுதந்திர போராட்டத்திற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தனர் என்றால் மிகையாகாது.
“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” - என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே நம்பிக்கையுடன் பாடிய இவரது வரிகள் அக்காலக்கட்டத்தில் மக்களிடையே புத்திணுர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் துரதிஸ்ட வசமாக விடுதலைக்கு முன்பே செப்டம்பர் 11, 1921 ம் ஆண்டு மறைந்தார்.
சேனைப் படைகளால்
இயலாமல் போன தினம் ...
யானை ஒன்று மிதித்து
கவிஞனை கொன்ற தினம் ...
பதிமூன்று பேர் மட்டும்
இடுகாடு வரை வந்த தினம்,
செத்த பின் உன் பெருமையை
தூக்கிப் பிடித்தது எம் இனம்....
பாட்டால் 'பா'ரதம் ஒட்டிய
பாட்டா.....
நாடு விட்டு ஓடிய
வெள்ளையனை நீ
காணாமல் போனது
உன் துரதிர்ஷ்டமே.....
வெள்ளையன்
வெளியேறினாலும்
கொள்ளையடிக்க
உள்ளூரில் நம் இனத்தில்
மிச்சம் வைத்துப்
போனது எம்
துரதிர்ஷ்டமே...
தமிழ் மொழியினை அடுத்த கட்டப் பரிமாண வளர்ச்சிக்குக் கொண்டு செல்லவேண்டும்.தமிழ்ச் சங்கங்களை அமைத்து தமிழ்மொழியை வளர்போம்.
தமிழ் சங்கங்களை பாடசாலைகளிடையே ஏற்படுத்தி அதனூடாக மாணவர்களியே தமிழ் மொழி ஆளுமை விருத்தியை மேம்படுத்துவதோடு அதனூடாக எமது கலை
கலாசாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும். அத்துடன் பாடசாலை மட்டத்திலிருந்தே மாணவர்களிடையே தமிழ்மொழிப் புலமையை வளர்த்துக் கொள்ள முடியும் என யாழ். பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் கீ.விசாகரூபன் தெரிவித்தார்.
கலாசாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும். அத்துடன் பாடசாலை மட்டத்திலிருந்தே மாணவர்களிடையே தமிழ்மொழிப் புலமையை வளர்த்துக் கொள்ள முடியும் என யாழ். பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் கீ.விசாகரூபன் தெரிவித்தார்.
தமிழர் கண்ட மெய்யியல்!
பன்னெடும் காலம் தொட்டு தமிழர்கள் ஏதாவது வகையில் கடவுளை வணங்கியே வந்துள்ளனர். அது எல்லை காவல் தெய்வமாக இருக்கலாம் அல்லது உருவமற்ற ஒளி வழிபாடாக இருக்கலாம் . தமிழ் புலவர்கள் இறைவனுக்கு காப்பு வைத்தே பாடல்களை இயற்றி உள்ளனர். தமிழ் தந்த சித்தர்கள் கடவுளை பற்றியும் இயற்கையின் ரகசியங்களை பற்றியும் நீண்ட நெடிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வுகளின் போதே பல அறிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு கொடுத்தனர்.
மூழ்கிப் போன உண்மைகள்
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன். என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.
தமிழிசை
கீத, வாத்திய, நிருத்தியமாகிய இம்மூன்றும் சேர்ந்தது சங்கீதம் என்பது எவ்வாறோவெனின்:- கீதமென்பது பாட்டு. இந்த பாட்டை வசனநடை போல கூறலாம். அவ்வாறு கூறும்போது அது கீதம் என்ற எழுத்தின் நிலையைப்பெறும் இந்தப் பாட்டாகிய எழுத்துக்கள் வாத்தியமாகிய சுர அமைதியில் மேலும் கீழும் நல் ஒலியோடு பயின்று வரும்போது, அது கீதமும் வாத்தியமும் ஆகி அந்த கீதம் சுரஒலியாகிய வாத்தியத்தில் அமைதி பெருகின்றது.
பழந்தமிழர்களும் உணவும்.
தமிழர்கள் எங்கே வாழ்ந்தார்கள் என ஆராய்வதை விடவும், அவர்கள் ஐந்து வகையான நில அமைப்பில் பரந்து வாழ்ந்திருந்தனர் என கொள்ளலாம். ஆதியில் வேட்டை சமூகமாய் புலால் உண்பவர்களாய் இருந்தாலும், காலப் போக்கில் சமவெளி மற்றும் ஆற்றங்கரை நாகரீகமாய் தலையெடுத்த பின்னர் காய், கனி மற்றும் கிழங்குகளை தங்கள் உணவில் இணைத்துக் கொண்டதற்கான குறிப்புகளை காண முடிகிறது.
மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்
கணக்கதிகாரம் என்கின்ற புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல். இதைத் தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .
தமிழர்களின் திருமண சடங்குகளும் அது உணர்த்தும் பொருளும்
தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்








.jpg)







.jpg)



.jpg)















.png)
+-+Copy.png)

