மதஒற்றுமைக்கு எடுத்துகாட்டும் வகையில் கொச்சுவேலியிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணி மற்றும் காரைக்காலுக்கு இரவு நேர தினசரி ரயில் இயக்கப்படுமா?



  திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களின் புனித இடமான வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா கோவிலுக்கும் தென்மாவட்ட பகுதியிலிருந்து அதிகபடியான கிறிஸ்தவ மற்றும் பிற மதத்தினரும்  வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க தினசரி செல்கின்றனர். இதைபோல் தென்மாவட்டங்களில் உள்ள போல் முஸ்லீம் மதத்தினர் நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவிற்கும், முத்துபேட்டை தர்கா, காரைக்கால் தர்காவிற்கும் அதிக அளவில் சென்று வருகின்றனர். 

இந்துக்களின் பனித இடமான உலக பிரசத்திப்பெற்ற நவகிரக தலங்களில் சனிபகவானுக்கு என கோவில் உள்ள ஒரே புனித இடமான காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாறு சனி பகவான் ஆலையம், ஆலங்குடி குருபகவான் ஆலையம், தமிழ்நாட்டில் கல்வி கடவுளுக்கு என  கோவில் உள்ள கூத்தனூரில் உள்ள சரஸ்வதி அம்மன் கோவில், 63 நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார்க்கு என உள்ள கோவில் காரைக்கால் அம்மையார் கோவில், தஞ்சை பெரிய கோவில், திருவையாறு தியாகராஜ சுவாமிகள், பேரளத்தில் உள்ள திருமியச்சூர் லலிதாம்பிகை கோவில், திருவாரூர் தியாகராஜ கோவில், புன்னைநல்லூர் மாரியஅம்மன் கோவில் போன்ற இந்து கோவில்களுக்கு தென் மாவட்டங்களிலிருந்து செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. 


         தென் மாவட்டங்களில் உள்ள பக்தர்கள் மூன்று மதங்களையும் சார்ந்த ஆன்மீக இடங்களுக்கு செல்ல வசதிக்காக கொச்சுவேலியிருந்து நாகர்கோவில் , திருநெல்வேலி, விருதுநகர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி மற்றும் காரைக்காலுக்கு  தினசரி இரவு நேர ரயில் இயக்க கோரி வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் செல்லும் பயணிகள் மற்றும் மாவட்டத்திலிருந்து அந்த இடங்களில் பணிபுரிபவர்கள் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும் மிகவும் பயனள்ளதாக அமையும். இந்த வழி தடத்தில்  சிக்கல், திருகடையூர், பூம்புகார், தரங்கம்பாடி, கோடியக்கரை வனவிலங்கு சரணாலையம், முத்துபேட்டை அலையாத்தி சதுப்புநில காடுகள், உதயமார்த்தாண்டபுரம் மற்றும் வடுவூர் பறவைகள் சரணாலையம், திருமுல்லைவாசல், செட்டிநாடு போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. 

         இந்த ரயில் நாகப்பட்டிணம் ரயில் நிலையத்தில் வைத்து இரண்டு ரயிலாக பிரிக்கப்ட்டு ஒரு பகுதி வேளாங்கண்ணிக்கும் மீதமுள்ள மற்ற பகுதி காரைக்காலுக்கும் செல்லுமாறு இயக்கப்பட வேண்டும். (தற்போது கோயம்பத்தூர் - நாகர்கோவில்/தூத்துகுடி ரயல் வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி நாகர்கோவிலுக்கும் மற்ற பகுதி தூத்துகுடிக்கும் இயக்கப்ட்டு வருகிறது) இதை போன்று இந்த ரயிலும்  கொச்சுவேலியிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணி மற்றும் காரைக்காலுக்கும்  செல்லதக்க வகையில் இயக்கப்பட வேண்டும். இவ்வாறு இயக்கும் போது இந்த ரயிலில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் ஆகிய மூன்று மதத்தை சார்ந்த ஆன்மீக பயணிகள் பயணிப்பார்கள். இவ்வாறு பயணிப்பதால் இந்த ரயில் மத ஒற்றுமைக்கு ஓர் எடுத்துகாட்டாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
</div>

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv