அடித்தட்டு மக்களின் மானத்தை வைத்து காசு பார்க்கும் ஜீதமிழ் சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மேல என்னுடைய நீண்ட நாள் கோபம் அல்லது ஆதங்கத்தை வெளிபடுத்தி விடுகிறேன். முதலில் இது உண்மையாக நடத்ப்படுகிற நிகழ்ச்சி தானா என்கிற சந்தேகம் இருக்கிறது. படத்தை பார்த்தால் தெளிவாக புரியும். படம் "ஒன்றில்" இருப்பது தான் அந்த நிகழ்ச்சி நடக்கும் அறை. அதாவது காதலர்களாக இருந்து, பிரிந்து இப்போது சமரசம் பேச இந்நிகழ்ச்சிக்கு வந்து தனியாக மனம் விட்டு பேசுகிறார்கள்.


 படம் "இரண்டில்" இவர்கள் தனியாக பேசுவதை பெண்ணுக்கு பின்னால் இருந்து படம் பிடிக்கிறார்கள். எதிரே அமர்ந்து இருக்கிறவர் அதை பார்க்க முடியும். அதே போல படம் மூன்று மற்றும் நான்கில் OSS (Over the Shoulder Shot) என்கிற முறையில் படம் பிடிக்கிறார்கள். அதாவது, எதிரே உள்ளவரின் தோள்பட்டையின் மேல் வைத்து அல்லது அவரின் பின்னால் நின்று அவரின் உடற்பாகம் தெரிவது போல எடுக்கப்படுகிற முறை. மேலும்  இவர்கள் தனியாக பேசும் இந்த படங்களில் "முதல்" படத்தில் அந்த ஆணின் பின் புறம நின்று படம் எடுக்க இடமே இல்லை.

ஆனால் OSS முறையில் அங்கு நின்று தான் எடுக்க முடியும். ஒருவேளை அவருக்கு பின்புறம் கண்ணாடி பகுதியில் இருந்து எடுத்து இருந்தால் அவர்களுக்கு தெரியாமல் எடுக்கிறார்களா??? ஒன்று பேசிக்கொண்டு இருக்கிற இந்த நபர்களுக்கு தெரிந்து இவர்களுக்கு பின்னால் நின்று எடுத்து இருக்கலாம். அல்லது இவர்களுக்கு தெரியாமலே இவர்கள் தனியாக பேசுவதை படம் பிடித்து இருக்கலாம்.

 முதல் முறையில் எடுத்து இருந்தால், இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருக்கிற நாம் அனைவரும் முட்டாள். இரண்டாம் முறையில் எடுத்து இருந்தால் சமரசம் தேடி சென்று இருக்கிற நபர்கள் முட்டாள்கள். இந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க வருபவர்களிடம் முன்பாகவே அதற்கான ஒப்புதல் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுவார்கள். அது அதிக பக்கங்கள் கொண்டதாய் இருக்கும் அல்லது ஆங்கிலத்தில் இருக்கும்.

 எனவே மக்களும் கண்டு கொள்வது இல்லை. அப்படியே கையெழுத்து போட்டு விடுவதால் இவர்களுக்கு தெரியாமால் எடுக்கபடுகிற காட்சிகளாய் இருந்தாலும் அவற்றை எதிர்த்து வழக்கு தொடர இயலாது.. இப்படியாக யாராவது ஒருவரை ஏமாற்றி TRP ரேட்டிங் ஏற்றுவதற்காக இப்படி ஏமாற்று வேலைகள் செய்து மக்களை முட்டாள் ஆக்க வேண்டுமா??? நாலு சுவற்றிற்குள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனைகளை இப்படி உலகம் முழுதும் காண்பித்து பணம் சம்பாதிப்பது முறையா??? இந்நிகழ்ச்சி ஒளிபரப்பிய பின்பு அவர்களால் வெளியில் சுதந்திரமாய் செல்ல இயலுமா??? இதை போன்ற மக்களை முட்டாளாக்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க கூடாதா???

இளவரசன் 



அடித்தட்டு மக்களின் மானத்தை வைத்து காசு பார்க்கும் ஜீதமிழ் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தடை செய்ய உங்களின் உதவி தேவை படுகிறது. தயவு செய்து உதவுங்கள். இந்த நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி (BCCC) க்கு ஒவ்வொருவரும் சில நிமிடங்கள் ஒதுக்கி தபால் அலுவலகத்திற்கு சென்று தந்தி அனுப்பமாறு கேட்டு கொள்கிறேன். இதை படிக்கும் நூறு பேரில் ஒருவராவது தந்தி அனுப்புவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.

 ஆய்றம் தந்தியாவது இந்த நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி போக வேண்டும். தந்தியில் உங்களுடைய கருத்தை சொல்லி ஆங்கிலத்தில்
please ban ztamil solvathellam unmai program என்று சொல்லி இந்த முகவரிக்கு முடிந்த வரை சிக்கிரம் அனுப்புங்கள். broadcasting content complaint council (bccc)
post box no : 3812
new delhi- 110049
fax no : #91-11-43794455
 email: bccc@ibfindia.com
 தந்தி முலம் அனுப்ப தவறுபவர்கள் இந்த ஈமெயிலுக்கு உங்களது புகாரை அனுப்புங்கள். bccc@ibfindia.com


முகநூலில் இருந்து 


1 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv