சிந்தனைத்துளிகள்

1. சிலந்தியின் தன்நம்பிக்கையைப் பார்.. அது அன்னியப் பொருட்களால் வீடு கட்டாது, தன் எச்சிலால் மட்டுமே வீடு கட்டும்.

02. குருடர்கள் வாழும் ஊருக்கு தெரு விளக்கு எதற்காக..

03. உலகத்தை வரையலாம் ஆனால் உள்ளத்தை வரைய முடியாது.

04. அரசியலில் ஈடுபடாதே ஈடுபட்டால் அதுதான் உனக்கு செத்தவீடு

05. எந்த மதத்திலும் சம்மந்தப்படாத புதிய நவீன துறவியே இந்த உலகிற்கு தேவை.

06. எதிர் காலம் உங்கள் கையில் என்ற முழக்கம் கேட்டு மயங்கும் இளைஞன் நிகழ்காலம் கிழவர்களின் கைகளில் என்பதை அறிய மறக்கிறான். எதிர்காலம் கைக்கு வராமல் கானல் நீராகப் போக காலகாலமாக உலகம் முதியவரிடமே சிக்குண்டு கிடக்கிறது.

07. எண்ணுவதால் மட்டும் புரட்சி ஏற்படாது, நம் நாட்டின் சாபக்கேடு எண்ணுவதற்கு மட்டும் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

08. சமூகப்புரட்சி உருவாகாமல் தடுப்பதற்காகவே நிறையப்பேர் அவதாரம் பற்றி பேசுகிறார்கள்.

09. இந்திய சுதந்திரம் பணக்காரரின் சுவர்க்கத்தையும் ஏழைகளின் நரகத்தையும் படைத்ததைத் தவிர வேறு எதையும் செய்ததாகக் கூற மடியாது.

10. நீ மறைந்து கொள் மற்றவர்கள் பிரகாசிப்பதற்காக..

11. வறுமைக்கு பசி வந்தால் அது முதலில் புலவனையே புசிக்கும்.

12. எத்தனை நந்திகள் மறைத்தாலும் வரவேண்டிய நல்ல இலக்கியம் வந்தே தீரும்.

13. பசித்த மரத்திற்கு பக்கத்திலிருக்கும் கிணற்றால் தரமுடியாத நீரை தூரத்து மேகம் தந்துவிடும்.

14. தனது குளத்தில் ராஜாவாக இருக்கும் மீன் சமுத்திரம் போய் வேலைக்காரனாக இருக்காது.

15. எது நியாயம் என்றால் எது நிமிடத்திற்கு நிமிடம் மாறிச் செல்கிறதோ அதுதான் நியாயம்.

16. கடல் என்பது தண்ணீரின் ஒற்றுமை, நீர் துளிகளை இறைக்கலாம் ஆனால் கடலை இறைக்க முடியாது.

17. புத்திசாலியாக இருந்தால் பணக்காரனாக இருக்கணும், பணக்காரனாக இருந்தால் புத்திசாலியாக இருக்கணும்.

18. சிந்திக்கத் தெரியாதவனை மன்னிக்கலாம் ஆனால் சிந்திக்க முடியாதவனை மன்னிக்க இயலாது.

19. உனக்குள் இருக்கும் சோம்பலை வெல்லாது நீ உலகத்தை வெல்ல முடியாது.

20. நேரத்தை ஒத்தி வைக்கும் ஒவ்வொரு நிமிடமும் உன் வெற்றியும் ஒத்திவைக்கப்படுகிறது.

21. போர்க்களத்திற்கு முரசறைந்துவிட்டு ஆயுதம் தேடி உலைக்களத்திற்கு போவதே இப்போது பலரது வேலையாகிவிட்டது.

22. போர் என்றால் ஆயுதங்களால் தோற்கடிப்பதல்ல மற்றவரை சிந்தனையால் தோற்கடிப்பதாகும்.

23. பொருள்தேட கற்றுக் கொடுப்பதல்ல கல்வி வாழக் கற்றுக் கொடுப்பதே கல்வியாகும்.

24. நமது கவிஞர்களுக்கு உலகத்து கொடுமைகள் எல்லாம் தெரியும் ஆனால் நமது பக்கத்து வீடு பற்றியெரிவது மட்டும் தெரியாது.

25. யாருக்கு நிலம் சொந்தம் என்று போருக்கு செல்வோரே அதோ ஊருக்கு வெளியே இருக்கிறது உங்களுக்கான நிலம் என்று சொல்லி நிற்கும் சுடுகாடு.

26. உட்கார முடியாத ஒருவன் நீ உட்கார வேண்டிய நாற்காலியை கைப்பற்றி வைத்திருப்பான் அதைக் கைப்பற்று.

27. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் பண்பாடு ஆனால் எந்தத் தமிழ் மன்னனுமே ஒரு பெண்ணுடன் வாழ்ந்தாக சரித்திரமில்லை.

28. நம்மில் பெரும்பாலோர் வாழவும் அஞ்சுகிறோம் அதுபோல சாகவும் அஞ்சுகிறோம்.

29. கடந்தகால பெருமைகளை மட்டும் கூறாதே தவறுகளையும் கூறு.

30. மண்ணைப் பிடிக்கும் ஆதிக்கவாதிகள் அம்மண்ணின் மொழியை ஒருபோதும் படிப்பதில்லை ஆனால் மண்ணின் மக்களிடம் தமது மொழியைத்தான் படிக்க வைக்கிறார்கள்.

-அலைகள்

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv