தாயும் பிள்ளையும்-இன்று ஒரு தகவல்

தாயும் குழந்தைகளோடு கதைக்கும் போது பார்த்தீர்களானால்குழந்தை மாதிரியே மழலை மொழியில் கதைப்பார்கள். அப்படிக் கதைத்தால் தான் குழந்தைக்குப் புரியும் பிடிக்கும் என்பது இவர்களுடைய நினைப்பு. ஆனால் அப்படிக் கதைப்பது தவறு என்கிறார்கள் ஆராய்ச் சியாளர்கள். நாம் பேசுவதைப் பார்த்துத் தானே குழந்தைகள் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாமே குழந்தைகள் மாதிரி பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் நல்ல விதமாக பேசக் கற்றுக் கொள்வது எப்படி? இதனால் குழந்தையின் பேசக் கற்றுக் கொள்ளும் வேகம் தடைப்படும். ஒரு பத்துக் குழந்தைகளிடம்... உனக்கு அம்மாவைப் பிடிக்குமா? அப்பாவைப்பிடிக்குமா? என்று கேட்டால் அதிகமான குழந்தைகள் அம்மாவைப்பிடிக்கும் என்று தான் சொல்லும். அப்பா என்ன பாவம் பண்ணினார். அது ஒன்றுமில்லை...

குழந்தை தாய்வயிற்றில் ஏழுமாதக் குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் குரலைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்குமாம். தாயின் வயிற்றுக்குள் ஒரு சின்ன “மைக்” கை வைத்து ஒலிப்பதிவு செய்து பார்த்திருக்கிறார்கள். மற்றவர்கள் பேசுவதைவிட அம்மா பேசும் குரல் தான் மிகவும் தெளிவாகக் கேட்டுதாம். ஆக... ஒரு குழந்தை ஆரம்பத்திலிருந்தே கேட்கும் குரல் அம்மாவின் குரல்! அதனால தான் அம்மாவென்றால் ஒரு தனிப்பாசம். தாயின் பேச்சைக் கேட்டு... வயிற்றில் இருக்கும் குழந்தை பேசக் கற்றுக் கொள்கிறது. பிறக்கும் போதே நமக்கெல்லாம் தாய்மொழிப்பற்று இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

பிரெஞ்சு மொழி பேசும் ஒரு குடும்பத்தில் ஆராய்ச்சி நடத்தினார்களாம். பிறந்து நான்கு நாள் ஆவதற்குள் குழந்தை ரஷ்ய மொழியை விட பிரெஞ்சு மொழியை விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்தியிருக் கிறார்கள். எட்டு வயதுக்கு மேல் புதிதாகக் கற்றுக் கொள்ளும் எந்த மொழியுமே தாய் மொழியை விட கஷ்டமாகத்தான் இருக்குமாம்.

...
ஒரு குழந்தை பிறந்து 8 மாதம் ஆனதுமே... அதற்கு நாம் பேசும் பேச்சு புரிய ஆரம்பித்துவிடும். அதனால் அதற்குப் பின்னரும் அதனோடு உட்கார்ந்து கொண்டு சின்னக் குழந்தை மாதிரி நீங்களும் மழலை மொழி பேசிக் கொண்டிருக்காதீர்கள். தெளிவாக நல்ல தமிழில் பேசுங்கள். அது புரிந்து கொள்ளும். கற்றுக் கொள்ளும். அந்த நேரத்திலெல்லாம் நாம் பேசுவதை நாம் பேசுவது போலவே குழந்தை திருப்பிச் சொல்லும். கிளிமாதிரி! தானே யோசித்துப் பேச இரண்டுதமூன்று வருடங்கள் ஆகும். அதற்கிடையில் குழந்தை தப்புத் தப்பாக வார்த்தைகளைப் போட்டுப் பேச ஆரம்பிக்கும்.

இப்ப உதாரணத்துக்கு... பூனைக்குட்டி வந்தார்.... அப்பா போச்சு... இப்படியயல்லாம் பேசும். அதைப்பார்த்துச் சிரிக்கக்கூடாது. கிண்டல் பண்ணக் கூடாது. வார்த்தை வித்தியாசத்தைப் பொறுமையாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நீங்களும் நிறைய பேச வேண்டும். குழந்தைகளையும் பேசச் சொல்ல வேண்டும். நல்லா பேசிக் கொண்டிருக்கும் குழந்தையிடம் போய் வாயை மூடு என்று சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது.

ஜான்லாக் என்ற அமெரிக்க விஞ்ஞானி இதைப்பற்றியயல்லாம் நிறைய ஆராய்ச்சி பண்ணியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார் என்றால்... குழந்தை தாயின் வயிற்றில் ஏழு மாதமாக இருக்கும் போதே பேசக் கற்றுக் கொள்ள ஆரம்பித்து வருகிறது என்கிறார். விரைவாக பேசக் ஆரம்பித்துவிடும் குழந்தை புத்திசாலியாக இருக்கும் என்று சிலபேர் சொல்வதுண்டு. அதுவும் ஒரு பொய்யான நம்பிக்கை தான் என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர்.

பிறந்த குழந்தைக்கு அப்பாவை விட அம்மாவைப் பிடித்திருக்கிறது ஏன்? என்ற கேள்விக்கு இவருடைய ஆராய்ச்சி விடைசொல்கிறது. அப்பாக்கள் குழந்தைகளிடம் கெட்ட பெயர் வாங்குவதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. ஒரு அப்பா தன் பிள்ளையைப் பார்த்து, “உங்கள் கணக்கு வாத்தியார் ஹோம் வேர்க்டு கொடுத்திருப்பதாக சொன்னாயே... அதற்கு நான் ஏதாவது உதவி பண்ணவா? அந்தக் கணக்கை நான் செய்து தரவா?” என்று கேட்டார். அதற்குப் பையன், “வேணாம்ப்பா. நானே அதை தப்பாப் போட்டுக்கிறேன்”என்றான்

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv